அறிமுகம்

My photo
அனுப்பர்பாளையம் - திருப்பூர், தமிழ்நாடு, India

Sunday, November 22, 2015

ஏதோ தமிழன்கிறோம், போராடுறோம்,ஆனா ரீசார்ஜ் கடையில நம்பர் சொல்லுங்கனு சொன்னதும் 10 நம்பர தமிழ்ல சொல்ல திண்டாடுறோம்.என்னத்த சொல்ல...!


நான்லாம் மொத மொத FB வரும்போது நரம்புகள் புடைக்க நாட்டுக்கு ஏதாவதுகருத்துக்கள் சொல்லலாம்னு வந்தேன், அப்டி ஓரமா போயி உக்காருன்னுட்டாங்க😐

எதிர்காலத்தில் பருப்பு வாங்க பான் நம்பர் தேவைப்படலாம்...


பள்ளியில் பாடத்தில் ஏமாற்றலாம் கடைசி பக்கம் விடையை பார்த்து.... ஆனால்.,
வாழ்க்கையை ஏமாற்ற முடியாது. இறுதி பக்கமே தெரியாது. !

கும்பிடும் வரை கடவுள்;
திருட்டுப் போனால் சிலை !


அப்பா 50 ரூபா மிச்சப்படுத்த 30 நிமிஷம் நடந்ததுக்கும், நான் 30 நிமிஷம் மிச்சப்படுத்த 50 ரூபா ஆட்டோக்கு தர்றதுக்கும் பேரு தான் ஜெனரேஷன் கேப்!

பெரிய துணிக்கடையின் வாசலில் தன் துணிகளை விற்க நம்பிக்கையுடன் நிற்கும் பெரியவரை விட தன்னம்பிக்கை மிக்கோர் உலகில் எவரும் இல்லை!

படிப்பு முடிஞ்சதும் பொண்ணுங்க கல்யாணம் பண்ணிட்டு ராணி மாதிரி ஊர்ஊரா சுத்துறாங்க
பசங்கதான் வேலைதேடி தெருத்தெருவா சுத்துறாங்க
என்னடா டிசைன்!!

எந்த பூச்சிகள் இறந்தாலும் எறும்புகளே அதை இறுதி ஊர்வலமாய் எடுத்து செல்கிறது..!!!

விவசாய நிலத்தையெல்லாம் பிளாட் போட்டு வித்து காசு பாத்தோம்.
இப்போ விலைவாசி ஏறிப்போச்சு.
இனி பிளாட்டை விற்று பருப்பு வாங்கும் நிலைகூட வரும்.!


பென்சில் ஷார்ப்பனரை எல்லாம் ஆயுதமாக்கிய பெருமை இந்த சரஸ்வதி பூஜையைத்தான் சேரும் !!


எழுத்திடம் பிடித்ததே, அது கண்ணைப் பார்த்து மட்டும் தான் பேசும்.


ஜெயிக்கிறதுங்கிறது
வாழ்க்கையில்
ஏழைமக்களுக்கு ஒரு வேளை சாப்பாடாகவும்,
பணக்காரனுக்கு பல கோடி
சொத்தாகவும் உள்ளது.


பணக்கார குழந்தையா இருந்தாலும் வீடு வரையச்சொன்னா குடிசை வீடோ அல்லது ஓட்டு வீடோ தான் வரையிது :-))


தெருவை கடந்தேன்
ஜாதியைகேட்டான்
மாவட்டத்தை
கடந்தேன்
ஊரை கேட்டான்
மாநிலம்கடந்தேன்
இனமொழியை கேட்டான்
நாட்டை கடந்தபிறகே
இந்தியன் ஆனேன்!


குழந்தைகள் டம்ளரில் பால் குடித்து முடிந்ததும் மீசை வளர்ந்து விடுகிறது


காலையில வாக்கிங் போரதல கெடச்ச ஒரே நன்மை தெருநாய் எல்லாம் தோஸ்த்ஆனது தான்.. இப்பெல்லாம் நைட் லேட்டா வந்தாலும் நம்மள பாத்து குலைக்கிறதில்ல


கூகுளில் எதை தேடினாலும் கிடைக்கும்...!
உண்மைதான்...!
ஆனால் 2G யில் தேடாதீர்கள்...!
கூகுளே கிடைக்காது.!


உலகினில் எவருமில்லை-சைவமென!
தாய்ப்பாலென்ன தாவரத்திலிருந்தா கிடைக்கிறது ?


தெருவில் குப்பை போடுகிறவனை மரியாதையாகவும் அதை பொறுக்கி சுத்தம் செய்பவனை கேவலமாக பார்க்கும் சமுதாயம் உள்ளவரை என் நாடு சுத்தம் ஆகாது!!!

சிறகுகள் இல்லாமலேயே, பெண்களை தேவதைகளாக்கும் வல்லமை புடவைகளுக்கு உண்டு!


விலைவாசி - பெயர் சரியாத்தான் வச்சிருக்காங்க , சில இடங்களில் விலை வாசிக்க மட்டுமே முடியும். !


'ஒரு மெழுகுவர்த்தியின் தியாகத்திற்கு சற்றும் குறைவில்லாதது ஒரு தீகுச்சியின் மரணம் !!


விமரசனத்துக்கு பயந்தவன் வாழத்தகுதியற்றவன்.!


உன் இறுதிவரை நீ இழப்பதற்கு ஏதாவது ஒன்று மிச்சமிருக்கும் கவலைகொள்ளாதே!!


இந்த படிப்ப கண்டுபுடிச்சது எவன்டா" என ஆரம்பித்து...
"இந்த பணத்த கண்டுபுடிச்சது எவன்டா" என விடையில்லா கேள்விகளோடு முடிகிறது வாழ்க்கை.. !


வேலைக்குப் போகிறவர்களின் திங்கட் கிழமையை விட வேலை கிடைக்காதவர்களின் திங்கட் கிழமைகள் கொடூரமானவை. !


என் தந்தையை யாரோ நாலு பேர் ஏளனம் செய்யகூடாது என்ற பயத்தில் படித்து முடித்ததும் கிடைத்த வேலையை செய்ய தொடங்கினேன். ..! (ஆணின் முதல் தியாகம்)


ஒரு முதலாளியை ''வேலையை விட்டுட்டு போயிடுவேன்''னு மிரட்ரளவுக்கு வேலை செய்யனும் அதான் திறமை! !

தந்தையிடம் வாக்குவாதம் பண்ணுவதில் பெண்பிள்ளைகளுக்கு இருக்கும் சுதந்திரம் ஆண்பிள்ளைகளுக்கு இல்லை !!


அடுத்த வாக்கியம் பொய்.
முந்தய வாக்கியம் உண்மை.
இதுல எது உண்மை?எது பொய்?...அதுதான் கடவுள்.


இன்றைய தலைமுறை இளைஞர்கள் அப்பாவிடம் அதிகம் பேசலனாலும் அவரின் ஒவ்வொரு அசைவுக்கும் அர்த்தம் தெரிந்து வைத்துள்ளனர்.!

500 ரூபாயை எண்ணினாலும் ,50000 ரூபாயை எண்ணினாலும் ஒரே மாதிரி சத்தத்தோடு நடந்து கொள்ளும் ஏடி எம் மெசின் .,..ஏன்னா அது மெசின்,மனிதமனமில்லை

அவசரத்துக்கு ஒரு கொத்தனார தேடுனா ஊர்ல ஒரு பய இல்ல,
தெருவுக்கு நாலு இஞ்சினியர் மட்டும் இருக்கானுங்க !!

சொகுசு பேருந்து என்பது பெரிய சைஸ்
"ஷேர் ஆட்டோ"!

என்னதான் பெரிய மனுஷனா இருந்தாலும் ஐஸ்கிரீம் மேல இருக்கற அட்டைய ஒரு தடவ நக்கிட்டு தான் தூக்கி போட்றாங்க!

இவன் என்ன நினைப்பான் அவன் என்ன நினைப்பான்னு நினைச்சே வாழ்றோம்.ஆனா உண்மையில ஒருத்தனும் நம்மளைப் பத்தி நினைக்கிறதேயில்ல!....நிதர்சனம்

சத்தம் போட்டு அழ எல்லோருக்கும் ஒரு காரணம் நிச்சயம் இருக்கும், ஆனால் வாய்ப்பு நிச்சயம் இருக்காது !

இந்த டாக்டர்கள் வசதி இல்லாதவன பாத்து அது சாப்புடு இது சாப்புடுனு சொல்லுவான். வசதி இருக்கவன பாத்து எதையும் சாப்புடகூடாதுனு சொல்லுவான்.!😐

வாட்ஸாப்ல "Hey there iam using watsapp"ன்னு ஸ்டேட்டஸ் வச்சிருக்குறவன் தான் உண்மையில யூஸ் பண்ணாதவன்.

சிலர் நம் பெயரை அழகா வித்தியாசமா கூப்பிடுவதால் அவர்களை அதிகம் பிடிக்கிறது.

வெளிநாட்டில் வேலையில் இருக்கும் மகனுக்கு தன் பெற்றோர் கூட தூரத்து சொந்தம் தான் 😐

இறுதி வரை வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டுமே என்ற கவலை சிலருக்கு, இப்படியே இருந்துவிடுமோ என்ற கவலை சிலருக்கு!!

250 ரூபாய்க்கு பளிச்சென்றும் 100 ரூபாய்க்கு சுமாராகவும் இலவச தரிசனத்திற்கு படுமங்கலாகவும் காட்சி தருகின்றார் கடவுள்...!!

மொபைல் போனை முதலில் வைத்திருந்தவர்கள் ஆச்சர்யப்படுத்தினார்கள். இப்போது வைத்திருக்காதவர்கள் ஆச்சர்யப்படுத்துகிறார்கள்...!!!

தூக்கம் வராமல்
முதலாளி...
தூங்கி வழியும்
வாட்ச்மேன.........முரண்.

கோடிகளில் சம்பாதித்து நடிகன் செய்யும் உதவிகள்,டீக்கடையில் பிச்சைக்காரனுக்கும் சேர்த்து டீ சொல்லும் தினக்கூலியின் வள்ளல்தனத்துக்கு கீழேதான்.!

கடவுளுக்கு நீங்களாகவே ஒரு உருவம் கொடுத்து விட்ட படியால்..கடவுள் உங்கள் எதிரில் இருந்தாலும் தெரிவதில்லை!

ஒரு ஆண் 25 வயதுக்கு மேல் எடுக்க போற ஒவ்வொரு முடிவும் தீப்பெட்டியில் உரசும் கடைசி தீக்குச்சியை போல அதீத கவனம் செலுத்த வேண்டியுள்ளது.!!

கிலோ கணக்குல புத்தகம் தூக்கிட்டு குழந்தைங்க போறதாலதான் அதுக்கு L"KG".... U"KG"...னு பேருபோல...😐

நீண்ட நேர தேடுதலுக்கு பின் கிடைக்கும் ஒவ்வொன்றுமே, என் முந்தைய தேடுதலில் கிடைத்திருக்க வேண்டியவைகளாகவே இருக்கின்றன!

கொட்டும் "மழையில்" இரண்டு விதமான பிள்ளைகள்
மாம்.!
இட்ஸ் ரைனிங்..ஏசியை கம்மி பண்ணுங்க😅
அம்மா.!
இங்கேயும் ஒழுகுது பாத்த[truncated by WhatsApp]

Friday, November 20, 2015

On the Way to Infosys Mysore on 31.10.2015

Saturday, November 7, 2015

 

From The Indian Express

Supreme Court sets 2005 cut-off on women right to ancestral property

The court said the father would have had to be alive on September 9, 2005, if the daughter were to become a co-sharer with her male siblings.



In a ruling that will restrict the right of women seeking equal share in ancestral property, the Supreme Court has said that the 2005 amendment in Hindu law will not give property rights to a daughter if the father died before the amendment came into force.
The court held that the amended provisions of the Hindu Succession (Amendment) Act, 2005, could not have retrospective effect despite it being a social legislation. The court said the father would have had to be alive on September 9, 2005, if the daughter were to become a co-sharer with her male siblings.

The Hindu Succession Act, 1956, originally did not give daughters inheritance rights in ancestral property. They could only ask for a right to sustenance from a joint Hindu family. But this disparity was removed by an amendment to the Act on September 9, 2005.
The apex court judgment has now added another disqualification for women regarding their right of inheritance. Until now, they could not ask for a share if the property had been alienated or partitioned before December 20, 2004, the date the Bill was introduced. This judgment makes it imperative for the father to have been alive when the amendment came into force.
Settling the law in the wake of a clutch of appeals arising out of high court judgments, a bench of Justices Anil R Dave and Adarsh K Goel recently held that the date of a daughter becoming coparcener (having equal right in an ancestral property) is “on and from the commencement of the Act”.

The bench overruled the view taken by some high courts that the amendment being a gender legislation that aimed at according equal rights to the daughter in ancestral property by removing discrimination, should be applied retrospectively.
Interpreting statutory provisions, the top court shot down the argument that a daughter acquires right by birth, and even if her father had died prior to the amendment, the shares of the parties were required to be redefined.

“The text of the amendment itself clearly provides that the right conferred on a ‘daughter of a coparcener’ is ‘on and from the commencement’ of the amendment Act. In view of plain language of the statute, there is no scope for a different interpretation than the one suggested by the text,” it said.
Further, there is neither any express provision for giving retrospective effect to the amended provision nor necessary intent, noted the court, adding “even a social legislation cannot be given retrospective effect unless so provided for or so intended by the legislature”.
About applicability of the amendment to the daughters born before it was brought, the bench held that the new law would apply irrespective of the date of birth.

“All that is required is that the daughter should be alive and her father should also be alive on the date of the amendment,” it said.

The court also held that alienation of ancestral property, including its partition, which may have taken place before December 20, 2004, in accordance with the law applicable at that time, would remain unaffected by the 2005 amendment, and those partitions can no longer be reopened by daughters.



Tuesday, November 3, 2015



Copied from Blog

'அப்'பெடுத்து அப்பிக்கோ!

ஒருவர் என்னிடம் கேட்டார்.

"நண்பா.. இந்த இணையவழி பொருள் விற்பனையாளர்கள் நேரடியாக வாங்குபவர்களுக்கு சலுகைகள் தராமல், அவர்களுடைய 'அப்'பை திறன்பேசியில் நிறுவி அதன் வழியாக வருபவர்களுக்கு மட்டும்தான் எல்லா சலுகைகளையும் தருகிறார்கள்?  ஏன்?"

இது நல்ல கேள்வி. மில்லியன் டாலர் கேள்வி என்றுகூட சொல்லலாம். அவர் கேள்வியை எளிதாக கேட்டுவிட்டார். ஆனால் சரியான, அனைவரும் ஒப்புக்கொள்ளக்கூடிய பதில் கிடைப்பதுதான் கடினம்.

ஆமாம். இணையவழியில் பொருட்களை வாங்கவேண்டுமென்றால் 'இணைய உலவி' (browser) வழியாக வாங்கலாமே.

மேசைக்கணினியில் உலவி இருக்கிறது. மடிக்கணினியில் உலவி இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் திறன்பேசியிலேயே உலவி இருக்கிறது.

உலவி வழியாக வாங்கினாலும், அப் வழியாக வாங்கினாலும் காசு கொடுத்துத்தான் வாங்கப்போகிறோம்.  பின் ஏன் அப் வழியாக வருபவர்களுக்கு மட்டும்தான் சலுகை?

விமான நிலையம் போகவேண்டும். கார் வேண்டும் என்று சேவை நிறுவனத்தை தொலைபேசி வழியாக அழைத்தால், "ஐயா, அப் வழியாக கேளுங்கள். கிடைக்கும்" என்று மறைமுகமாக அப் நிறுவும் நிர்ப்பந்தத்தை உருவாக்கும் பதில் வருகிறது.

'அப்' வழியாக வருபவர்களுக்கு இணைய வழியாக வருபவர்களைவிட 10,15 நிமிடங்களுக்கு முன்னாலேயே சலுகைவிலை கொடுக்கப்படும்/ அப் வழியாக வாங்கினால் சில சதவீதம் மேலும் சலுகை விலை என்று மறைமுகமாக அப் நிறுவ நிர்ப்பந்தம்.

'அப்' நிறுவினால் முதல் சவாரி இலவசம்/ சில பண நோட்டுகள் கிரெடிட் என்று ஆசை காட்டப்படுகிறது.

'அப்' நிறுவினால் குலுக்கலில் ஒரு படி உயர்விலை உலோகம்/ மதிப்புமிக்க பரிசுகள் /கேஷ்பேக் இப்படியெல்லாம்கூட ஆசை காட்டப்படுகிறது.

சில இணைய விற்பனையாளர்கள் 'அப்' நிறுவினால்தான் எங்கள் சேவை கிடைக்கும் (App only sale). அதன் நிறுவ இயலாதவர்கள்/ விருப்பமில்லாதவர்கள் பணம் படைத்தவர்களேயானாலும் எங்கள் வாடிக்கையாளராக தேவையில்லை. இப்படியும் ஒரு நிலைப்பாடு.

மேலோட்டமாக யோசித்துப்பார்த்தால், ஒரு நிறுவனத்தின் அப் நிறுவல்களின் எண்ணிக்கையை அந்நிறுவனம் தன் ஆரோக்கியத்தின் அளவுகோலாக  நினைக்கலாம். அந்த எண்ணிக்கையை காட்டி மேலும் நிதி ஆதாரங்களை திரட்ட முயற்சிக்கலாம்.  அப் நிறுவிய வாடிக்கையாளர்கள் அடிக்கடி பொருள் வாங்க வசதியாக இருக்கும் என்றும் சொல்லலாம்.
 

அப்படியே இருக்கட்டும்.

இருந்தாலும் ஏதோ ஒன்று நெருடுகிறதா இல்லையா?

"என் பொருளை வாங்குகிறீர்களோ, இல்லையோ. முதலில் 'எங்கள் அப்பை' நிறுவுங்கள்" என்பதுதான் அவர்கள் வெளிநோக்கமோ என்று தோன்றுகிறது.  ஏன் அப்படி பெருங்குரலெடுத்து ஓலமிடுகிறார்கள்?

காலை எழுந்ததிலிருந்து படுக்கப்போகும்வரை எல்லா திசைகளிலிருந்தும் 'எங்கள் அப்பை நிறுவுங்கள்' என்று ஒரே அன்புத்தொல்லை. இன்னும் போகப்போக இந்த அன்புத்தொல்லை அதிகமாக வாய்ப்பிருக்கிறதே தவிர குறைய வாய்ப்பில்லை.

நாம் அப் நிறுவிக்கொள்வதில் அவர்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை?

அந்த கேள்விக்கு பதில் அந்தந்த 'அப்' நிறுவப்படும்போது அது உங்களிடம் கேட்கும் list of permission-களில் மறைந்திருக்கலாம்.  அந்த permission-களை பொறுமையாக படித்துப்பார்த்தால் அந்தக் கேள்விக்கு பதில் தெரியவரலாம்.

நம்மில் எத்தனை பேர் அந்த permission-களை படித்திருக்கிறோம்.

படிக்காமல் accept கொடுப்பவர்கள்தானே அதிகம்.

அது போதாதா 'அவர்களுக்கு'?